25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ராஜபாளையம் ஏ. கே.டி தர்மராஜா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முதல் முன்னாள் மாணவர் சங்கமம் நிகழ்ச்சி 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையம் ஏ. கே.டி தர்மராஜா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முதல் முன்னாள் மாணவர் சங்கமம் நிகழ்ச்சி 

ராஜபாளையம் நகரில்1888 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 136 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆங்கிலோ வெர்னாகுலர் பள்ளியில் "டி  குழுமம்24" என்ற பெயரில் ராஜபாளையம்ஏ. கே.டி தர்மராஜா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முதல் முன்னாள் மாணவர் சங்கமம் நிகழ்ச்சி பள்ளி தாளாளர் கிருஷ்ணராஜு தலைமையில் தலைமை ஆசிரியர் சரவணனின் முன்னிலையில் நடைபெற்றது.இப்பள்ளி மாணவர் செல்வராகேஷ் குமார் வரவேற்புரை ஆற்ற,மாணவர் ஷேக் முகமது ஒளியுல்லா நன்றியுரை வழங்கினார்.விழாவில் முன்னாள் மாணவர்கள் மற்றும் முன்னாள்  ஆசிரியர்கள் உட்பட சுமார் 855பேர் பங்கேற்றனர்.

இப்பள்ளியின் முன்னாள் மாணவர் அடையார் ஆனந்த பவன் உரிமையாளர் சீனிவாசன் சிறப்புரையாற்றி பள்ளியின் வளர்ச்சிக்கு ரூபாய் 5 லட்சம் நன்கொடை வழங்கினார்கள் .முன்னாள் மாணவர்  சங்கர சுப்ரமணியம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கிட ரூபாய்  2.5 லட்சம் செலவில் ஆர். ஓ அமைப்பு ஏற்படுத்த நன்கொடை வழங்கினார்கள்.முதன்முறையாக முன்னாள் மாணவர் சங்கத்திற்கு நிர்வாகி தேர்வு செய்யப்பட்டனர்.25 வயது முதல்82வயது வரை உள்ள முன்னாள் மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்கள் பழைய நினைவுகளை பகிர்த்து முன்னாள் ஆசிரியர்களை நெகிழ்வுடன் கெளரவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் மாணவர்க ளுக்கும் முன்னாள் ஆசிரியர் களுக்கும் விளையாட்டும் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்ளுக்கு பரிசு வழங்கப்பட்டன.ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன், காலை முதல் மாலை வரை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News